சங்ககால தமிழர் வரலாறு
முன்னுரை: தோராயமாக 400 BC ல் இருந்து 500 Ad வரை ஆன காலமே சங்க காலமாக கருதப்பட்டது . இந்த காலத்தில் தமிழகத்தை சேர, சோழ, பாண்டியர்கள் ஆண்டு வந்தார்கள் . சங்க காலத்தில் மூன்று வகை சங்கங்கள் இருந்தன அவை முறையே முதல், இடை, கடை சங்கம் எனப்படும். நாம் இந்த சங்ககால வரலாற்றை ஆராய்ந்தோமானால் சங்ககால தமிழரின்இலக்கியம், நாகரிகம், பண்பாடு, தொழில், பக்தி, அறிவியல் அறிவு என்று நாம் அறிந்துகொள்ள எவ்வளவோ விஷயங்கள் உள்ளன. கற்றது கை மண் அளவு என்பதற்கு ஏற்ப என் சிற்றறிவுக்கு தெரிந்த சிலவற்றை நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள விழைகின்றேன். இலக்கியம்: சங்க இலக்கியங்கள் குறிப்பிட்ட காலவரையறைக்கு உட்பட்டவை தன் காலச் சமுதாயத்தை பிரதிபலிப்பதாகும். எண்ணற்ற புலவர்கலால் அகப் பாடல்களும் , புறபாடல்களும் பாடப்பட்டன அவைகளும் அக்கால சமுதாயத்தை சித்தரிப்பதற்காகவே எழுந்தன எனலாம். கடை ஏழு வள்ளல்களும் வாழ்ந்த காலமிது . சமுதாயச் சித்திரிப்பு:- சங்க இலக்கியம் சமுதாயத்தில் உயர்ந்தவர்களையே அவர்களது வாழ்க்கை முறைகளையே புனைந்துரைக்கின்றது. சமுதாயத்தில் உள்ள நல்லதை மட்டுமே எடுத்துரை...