Posts

Showing posts from September, 2018

தமிழ்ப் பழமொழிகள்

அகத்தின் அழகு முகத்தில் தெரியும். அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை. அகல உழுகிறதை விட ஆழ உழு. அகல் வட்டம் பகல் மழை. அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு. அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான். அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது. அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா? அடக்கமே பெண்ணுக்கு அழகு. அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார். அடாது செய்தவன் படாது படுவான். அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும். அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும். அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள். அடியாத மாடு படியாது. அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் இலாபம். அணில் கொம்பிலும், ஆமை கிணற்றிலும். தமிழ்ப் பழமொழிகள்